
இந்திய அணியின் இளம் அதிரடி வீரர்களில் ரிஷப் பந்தும் ஒருவர். அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக 2021 மற்றும் 2022 ஆம் ஆகிய ஆண்டுகளில் அணியை வழிநடத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார்.
அதன்பின், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று வருகிறார். கார் விபத்தில் சிக்கிய காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இருப்பினும், அவரது அணியை ஊக்கப்படுத்தும் விதமாக ஐபிஎல் போட்டிகளைக் காண நேரடியாக மைதானத்துக்கு வந்தார் ரிஷப் பந்த்.
தற்போது வீட்டில் இருக்கும் ரிஷப்பிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று வருகிறது. கார் விபத்தில் சிக்கிய காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சமீபத்தில் அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்ச தேவையில்லையென பிசிசிஐ அதிகாரிகள் கூறிருந்தார்கள்.