
2021 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அபாரமாக விளையாடியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவால் வெளியேற்றப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.\
குரூப் ஸ்டேஜில் தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைக் கொண்டாடியது. பாகிஸ்தான் பவுலர் ஷாஹின் அஃப்ரீடி பிரமாதமாக பந்துவீசி ரோஹித் சர்மா, கே.எல்.ராகுலை அடுத்தடுத்து வீழ்த்தி அபாரத் தொடக்கம் கொடுத்தார். பிறகு ரிஸ்வான், பாபர் ஆசம் ஆகியோர் நோ-லாஸில் வென்றது இந்திய ரசிகர்களின் மனதில் ஆறாத வடுவானது.
இந்நிலையில் ரிஸ்வான் இந்திய வீரர்கள் மட்டுமல்ல அனைத்து எதிரணி வீரர்களுடனான உறவு பற்றி கூறும்போது, “ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைப் பற்றி எங்களுக்கு வெவ்வேறு உணர்வுகள் மற்றும் கருத்துகள் இருக்கலாம் ஆனால் களத்தில், நாங்கள் அவர்களை வீழ்த்துவது பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், களத்திற்கு வெளியே எங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் அதிக மரியாதையும் அன்பும் இருக்கிறது.