
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சியிருந்த போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இத்தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, டெல்லி, லக்னோ, அஹ்மதாபாத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் மட்டுமே நடைபெறும் என்றும், பிளே ஆஃப் சுற்றுக்கான மைதானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைத்து ஐபிஎல் அணிகளும் எஞ்சிய போட்டிகளுக்கான தங்களுடைய தயாரிப்புகளில் இறங்கிவுள்ளன.
அதன் ஒருபகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தங்கள் பயிற்சிகளை தொடங்கிவுள்ளனர். அதன் ஒருபகுதியாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பும்ரா தற்சமயம் பந்துவீச்சுக்கு பதிலாக பேட்டிங்கில் அதிகமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.