
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுயிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. இந்த ஆண்டில் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான். இந்நிலையில் போட்டி நடைபெறும் நேப்பியரில் காலை முதலே மழைபெய்த காரணத்தால் டாஸ் நிகழ்வு தாமதமானது. பின் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதீ முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.