
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரான இன்று தொடங்கியது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில் அடுத்து களமிறங்கிய இர்ஃபான் கான் ஒரு ரன்னிலும், ஷதாப் கான் 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் அந்த அணி 11 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் சல்மான் ஆகா மற்றும் குஷ்தில் ஷா இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 18 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, 32 ரன்களை எடுத்திருந்த குஷ்தில் ஷாவு தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அப்துல் சமாத் 7 ரன்களுக்கும், ஜஹாந்தத் கான் 17 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.