
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி மூன்றில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (மார்ச் 26) வெலிங்டனில் உள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹசன் நவாஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான முகமது ஹாரிஸும் 11 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஒமைர் யூசுஃபும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சல்மான் அலி ஆகா ஒருபக்கம் பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் களமிறங்கிய உஸ்மான் கான் 7 ரன்களுக்கும், அப்துல் சமாத் 4 ரன்களுக்கும் என நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த சலமான் ஆகா மற்றும் ஷதாப் கான் இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைத் தண்டியது.