
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. தற்போது ஒரு நாள் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை . இதனால் அஸ்வின் தொலைக்காட்சியை ஆஃப் செய்து விடுவதாக இப்படி ஓப்பனாக கூறிவிட்டாரே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் காரணம் அதுவல்ல.
கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் இரண்டு பந்துகளை பயன்படுத்தும் விதியை ஐசிசி கொண்டு வந்தது. ஒரு முனைக்கு ஒரு புதிய பந்து என நடைமுறைப்படுத்தும் இந்த சூழல் பந்து வீச்சாளர்களுக்கு பேரிடியை தந்தது. இரண்டு முனையிலும் புது பந்து என்றால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என பந்துவீச்சாளர்கள் நினைத்தனர் .ஆனால் அது தலைகீழாக மாறி பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு சாதகமாக மாறிவிட்டது.
இது குறித்து தான் தற்போது அஸ்வின் பேசியுள்ளார் . ஒருநாள் போட்டிகளை தற்போது பார்ப்பதே போரடிப்பதாக குறிப்பிட்டுள்ள அஸ்வின், பேட்டுக்கும், பந்துக்கும் சரிசமமான வாய்ப்பு ஒரு நாள் போட்டிகளில் இருப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். டி20 கிரிக்கெட்டின் நீண்ட வெர்சனாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதாக அஸ்வின் குறை கூறியுள்ளார்.