Advertisement

நான் பார்த்த மோசமான பந்து வீச்சு இதுதான் - பாண்டியாவை விமர்சித்த கவாஸ்கர்!

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசிய விதத்தை பார்க்கும் போது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சு இதுதான் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

Advertisement
 நான் பார்த்த மோசமான பந்து வீச்சு இதுதான் - பாண்டியாவை விமர்சித்த கவாஸ்கர்!
நான் பார்த்த மோசமான பந்து வீச்சு இதுதான் - பாண்டியாவை விமர்சித்த கவாஸ்கர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 15, 2024 • 04:00 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்துமுதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 15, 2024 • 04:00 PM

இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் தூபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்எஸ் தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர். மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தினார்.

ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் மும்பை அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஏனெனில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் எம்எஸ் தோனி 6, 6, 6, 2 என ஹாட்ரிக் சிக்சர்களுடன் 4 பந்துகளில் 20 ரன்களை விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்.

இறுதியில் இப்போட்டியில் மும்பை அணி அந்த 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் படுமோசமாக இருந்ததாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். அத்துடன் தம்முடைய முன்னாள் கேப்டனான தோனி சிக்சர்களை அடித்து ஹீரோவாகட்டும் என்ற வகையில் பாண்டியா வேண்டுமென்றே பந்துகளை வீசியதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர், "இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசிய விதத்தை பார்க்கும் போது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சு இதுதான். ஏன் என கேட்டால் ஹர்திக் பாண்டியா அவருடய பந்துவீச்சில் தோனி சிக்ஸர்களை அடித்து ஹீரோவாக மாற வேண்டும் என்பதற்காகவே பந்துவீசியது போல் இருந்தது.  குறிப்பாக தோனி சிக்சர்கள் அடிக்கும் விதமான பந்துகளை அவர் வீசினார். அந்த வகையில் இது மிகவும் சுமாரான பவுலிங் மற்றும் கேப்டன்ஷிப்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports