
'Overworked' Kohli's Batting Will Only Get Better After Captaincy Exit: Salman Butt (Image Source: Google)
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி பதவி விலக தயாராக இல்லை என்று கூறிய போதும், அவரின் பதவியை பறித்து ரோஹித்திடம் ஒப்படைத்ததால் பிசிசிஐ மீது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த கோலிக்கு அதிக அழுத்தங்கள் இருந்ததால் தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை வழிநடத்தி கோப்பை வெல்வேன் என விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் ரோஹித் சர்மாவிடம் முழு பொறுப்பையும் பிசிசிஐ ஒப்படைத்துள்ளது.