
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இத்தொடரின் முதல் பகுதியானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்திய வீரர்களுக்கான உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிவரும் நவம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது மொத்தம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ள. இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநில அணிகளையும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் அறிவித்து வருகின்றன. இதில் தமிழ்நாடு அணியை ஷாருக் கானும், கேரள அணியை சஞ்சு சாம்சனும், மும்பை அணியை ஸ்ரேயாஸ் ஐயரும் வழிநடத்தவுள்ளனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பெங்கால் அணியை அம்மாநில கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெங்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில், மத்திய பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய முகமது ஷமி தொழில்முறை கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பினார். முன்னதாக கடந்தாண்டு நடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த அவர், அதன்பின் ஓராண்டுகாலமாக எந்தவித போட்டிகளிலும் இடம்பிடிக்காமல் இருந்தார்.