
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 449 ரன்களும், பாகிஸ்தான் அணி 408 ரன்களும் அடித்தனர்.
இட்தையடுத்து 41 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 277 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 318 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் பாகிஸ்தான் அணி 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நான்காம் நாள் முடிவில் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இந்நிலையில் இன்று 5ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை. முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இமாம் உல் ஹக் 12 ரன்கள், பாபர் அசாம் 27 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க 80 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது.