
Pakistan-Afghanistan ODI Series Postponed Until Next Year (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இலங்கையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 3ஆம் தேதி இலங்கையில் தொடங்கும் இத்தொடர், திட்டமிட்டபடி நடைபெறுமென அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக இத்தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பதாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இன்று அறிவித்துள்ளன.
ஏனெனில் ஆஃப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் பயணம் செய்வது மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக இத்தொடரில் பங்கேற்கமுடியா சூழல் உருவாகியுள்ளது.