
Pakistan bowlers displayed a brilliant performance against Bangladesh in the Women’s Asia Cup 2022 (Image Source: Google)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி வீராங்கனைகள் பாகிஸ்தானின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதிலும் கேப்டன் நிகர் சுல்தானா (17), லதா மந்தல் (12), சல்மா காதும் (24) ஆகியோரைத் தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களோடு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 70 ரன்களை மட்டுமே எடுத்தது.