Advertisement
Advertisement
Advertisement

பாகிஸ்தானால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஹாரிஸ் ராவுஃப் நம்பிக்கை!

பாகிஸ்தான் அணியால் எந்த நாளிலும் எந்த அணியையும் வெல்ல முடியும் என்று நம்புகிறோம். கடந்த காலத்திலும் நாங்கள் இதனைச் செய்துள்ளோம் என அந்த அணி வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தெரிவித்துள்ளார்.

Advertisement
பாகிஸ்தானால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஹாரிஸ் ராவுஃப் நம்பிக்கை!
பாகிஸ்தானால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - ஹாரிஸ் ராவுஃப் நம்பிக்கை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 28, 2024 • 09:05 PM

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 28, 2024 • 09:05 PM

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று கார்டிஃபில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும் சூழலிலும், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற தொடரை இழப்பதிலிருந்து மீளும் சூழலிலும் களமிறங்கவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளுக்கும் அதிகரித்துள்ளன. 

Trending

இந்நிலையில் பாகிஸ்தான் அணியால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் ஒரு போட்டியில் தோற்றால் அது வலியை கொடுத்தாலும், ஒரு அணியாக, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களால் எந்த நாளிலும் எந்த அணியையும் வெல்ல முடியும் என்று நம்புகிறோம். கடந்த காலத்திலும் நாங்கள் இதனைச் செய்துள்ளோம். 

நீங்கள் தவறு செய்யும்போது, ​​நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள், அந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அடுத்த சில ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி மீண்டும் கம்பேக் கொடுப்போம். தற்சமயம் எங்கள் அணி வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் விளையாட்டுத் திட்டங்களைப் பின்பற்றி அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்த முயற்சிக்கிறோம்.

சமீபத்திய போட்டிகளில் எங்களது முடிவுகள் சாதகமாக அமையவில்லை. ஆனாலும் நாங்கள் எங்கள் திட்டத்தின் படி தொடர்ந்து செயல்பட்டால் நிச்சயம் அது எங்களுக்கான பலனை வழங்கும் என்று நம்புகிறேன். இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் கடினமானது, ஆனால் நாங்கள் வெற்றி பெற கடுமையாக முயற்சிப்போம். மேலும் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக அதிக கவனத்தும் செயல்பட்டும் வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement