Advertisement
Advertisement
Advertisement

பயிற்சியில் கோபத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் - காணொளி!

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட்டை இழந்ததன் காரணமாக பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசாம் தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டம்புகளை எட்டி உதைத்த சம்பவம் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement
பயிற்சியில் கோபத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் - காணொளி!
பயிற்சியில் கோபத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் - காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 17, 2024 • 02:39 PM

பாகிஸ்தான் அணியானது வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.  இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 21 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 17, 2024 • 02:39 PM

அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள காரணத்தால், இரண்டாவது போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Trending

ஏனெனில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் ஓய்வரை, ரசிகர்களின் இருக்கை மற்றும் உள்கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதன் காரணாக, இங்கு நடைபெறும் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதில் இல்லை என்றும், ஒருவேளை இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி இருந்தால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என்று பிசிபி அறிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், தங்கள் பயிற்சிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் அணி வீரர்கள் இன்றைய தினம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் நேற்றைய தினம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் வலை பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய காணொளி ஒன்று வைரலாகியது.

இந்நிலையில் இன்று அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட்டை இழந்ததன் காரணமாக தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டம்புகளை எட்டி உதைத்த சம்பவம் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க சில நாள்களே உள்ள நிலையில் பாபர் ஆசாம் இதுபோல் வலைபயிற்சியிலேயே சொதப்புவது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

பாகிஸ்தான் அணி: ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால் (உடற்தகுதிக்கு உட்பட்டு), அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement