Advertisement
Advertisement
Advertisement

BAN vs PAK, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!

வங்கதேச அணிக்கெதிரான மூன்றவாது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Advertisement
Pakistan complete the whitewash on Bangladesh in T20 series
Pakistan complete the whitewash on Bangladesh in T20 series (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 22, 2021 • 05:10 PM

வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 22, 2021 • 05:10 PM

அதன்படி களமிறங்கிய வங்கதேச வீரர்கள் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இப்போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது நைம் 47 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

Trending

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் உஸ்மான் காதிர், முகமது வாசிம் ஜூனியர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசாம் 19 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - ஹைதர் அலி இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முகமது ரிஸ்வான் 40 ரன்களிலும், ஹைதர் அலி 45 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இதனால் கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

வங்கதேச அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய கேப்டன் மஹ்முதுல்லா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இருப்பினும் பாகிஸ்தான் அணி கடைசி பந்தில் பவுண்டரி விளாசி போட்டியை முடித்தது. 

Also Read: T20 World Cup 2021

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியதுடன், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement