
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகல் பலப்பரீட்சை நடத்திய நிலையில், அப்போட்டியில் நியூசிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் 6.2 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். மேற்கொண்டு பேட்டிங்கின் போது அவர் காயத்தால் களமிறங்க முடியாமல் போனது. இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் ஹாரிஸ் ராவுஃப் விளையாடுவாரா என்ற சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் ஹாரிஸ் ராவுஃபின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்ஆர்ஐ மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன் பரிசோதனை முடிவில், ஹாரிஸ் ராவுஃபிற்கு காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது காயம் பெரியதல்ல, மேலும் பிப்ரவரி 19 அன்று கராச்சியில் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் அவர் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.