
Pakistan cricket fraternity condemns attack on ex-PM and captain Imran Khan (Image Source: Google)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இம்ரான் கான் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வந்தார். அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை பாகிஸ்தானின் பிரதமராகவும் ஆட்சிசெய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது இம்ரான் கான் பாகிஸ்தானில் உண்மையான சுதந்திரம் என்ற நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார் . இந்த பயணத்தின் போது இம்ரான் கான் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .
இதில் பலத்த காயமடைந்த இம்ரான் கான் குண்டு துளைக்காத வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக இம்ரான் கான் உயிர் பிழைத்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் சுட்டதில் குண்டு இம்ரான் கான் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.