
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான அணிகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானை தவிர்த்து மற்ற அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணிகளை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இத்தொடரில் பங்கேற்கும் முகமது ரிஸ்வான் தலைமையிலான 15 பேர் அடங்கிய அணியை இன்று அறிவித்துள்ளது. இதில் சமீப காலங்களாக பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்க முடியாமல் தடுமாறி வந்த ஃபகர் ஸமான், ஃபஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா மற்றும் சௌத் ஷகீல் ஆகியோர் இத்தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.