Advertisement

தினேஷ் கார்த்தி - ரிஷப் பந்த் பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பந்த் விவகாரத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முக்கிய தகவலை கொடுத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 26, 2022 • 16:01 PM
Pant As A Floating Batter & Karthik As The Finisher Needs More Game Time Ahead Of WC: Rohit Sharma
Pant As A Floating Batter & Karthik As The Finisher Needs More Game Time Ahead Of WC: Rohit Sharma (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை இந்திய அணி 2 -1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோதவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தான் தீவிரமடைந்துள்ளன.

இந்திய அணியில் உள்ள பெரும் குழப்பம் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பந்த் தான். ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் மீது முழு நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா, ரிஷப் பந்தை வெளியில் உட்கார வைத்தார். எனினும் தினேஷுக்கு பெரியளவில் பேட்டிங் வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending


இந்நிலையில் இதுகுறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், “என்னைப் பொறுத்தவரை டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் - பந்த் இருவருமே நிறைய போட்டிகளில் விளையாடி தயாராக வேண்டும். குறிப்பாக தினேஷ் கார்த்திக் தயாராக போட்டிகள் தேவை. ஏனென்றால் அவருக்கு ஒரு சில பந்துகளே ஆடுவதற்கு கிடைக்கிறது.

தென் ஆப்பிரிக்க தொடரில் என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை. தென்னாப்ப்ரிக்காவின் பவுலிங் லைன் அப்பை பார்ப்போம். அவர்களின் பவுலிங்கை பொறுத்து தான் பேட்டிங் வரிசையை முடிவு செய்வோம். அவர்கள் இருவரின் விஷயங்களில் மிகவும் யோசித்து தான் முடிவெடுக்கிறோம். இனி வரும் போட்டிகளிலும் சூழலை பொறுத்தே தேர்வு அமையும்” எனக்கூறியுள்ளார். 

ரோஹித் சர்மாவின் இக்கருத்தால் வருகிற உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திகிற்கே அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement