
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்தது.
தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி ஒருநாள் போட்டி இன்று மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா ஆடாததால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் ஆடினார்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகிய இருவரையும் ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் முகமது சிராஜ். ஜேசன் ராயும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இந்த பார்ட்னர்ஷிப் வளர்ந்துகொண்டிருக்க, ஜேசன் ராயை 41 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா, பென் ஸ்டோக்ஸை 27 ரன்னில் வீழ்த்தினார்.