Advertisement
Advertisement
Advertisement

அணிக்காக விளையாடுவது எப்போது அடுத்த நிலை உணர்வை தரும் - அப்துல்லா ஷஃபிக்!

அணிக்காக செயல்படுவது அடுத்த நிலை உணர்வு என்பதால், இப்போட்டியில் சதமடித்து அசத்தியதை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷஃபிக் தெரிவித்துள்ளார்.

Advertisement
அணிக்காக விளையாடுவது எப்போது அடுத்த நிலை உணர்வை தரும் - அப்துல்லா ஷஃபிக்!
அணிக்காக விளையாடுவது எப்போது அடுத்த நிலை உணர்வை தரும் - அப்துல்லா ஷஃபிக்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 07, 2024 • 10:03 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 07, 2024 • 10:03 PM

அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.

Trending

இதனையடுத்து பாபர் அசாம்- சகீல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 30 ரன்களை மட்டுமெ எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து குறித்து பேசிய அப்துல்லா ஷஃபிக், “அணிக்காக செயல்படுவது அடுத்த நிலை உணர்வு என்பதால், இப்போட்டியில் சதமடித்து அசத்தியதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதிலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வந்த நிலையில், அதிலிருந்து மீண்டு அடுத்த போட்டியில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதனால் நான் என்னுடியை விளையாடிய முழு கவனத்தையும் செலுத்தினே. 

Also Read: Funding To Save Test Cricket

அதுமட்டுமில்லாமல் ஷான் மசூத் போன்ற மூத்த வீரர் உங்களுடன் விளையாடும்போது, ​​எனக்கும் இது ஒரு கற்றல் தருணமாக நான் பார்த்தேன். ஆனாலும் முல்தானில் விளையாடுவது கடினமாக ஒன்றாகும். அதன் காரணமாக நாங்கள் நான்கு ஐந்து நாள்களாகவே இங்கு முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டோம். அதனால் இந்த மைதானத்தில் விளையாடும் போது தசைபிடிப்பு வருவது என்பது சாதாரணமான ஒன்று தான். நாங்கள் இப்போது நன்றாக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement