Advertisement

ஐபிஎல் 2025: இறுதிப்போட்டிக்கு முன் ஆர்சிபி அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு; பில் சால்ட் விளையாடுவது சந்தேகம்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

Advertisement
ஐபிஎல் 2025: இறுதிப்போட்டிக்கு முன் ஆர்சிபி அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு; பில் சால்ட் விளையாடுவது சந்தே
ஐபிஎல் 2025: இறுதிப்போட்டிக்கு முன் ஆர்சிபி அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு; பில் சால்ட் விளையாடுவது சந்தே (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 03, 2025 • 11:52 AM

ரசிகர்கள் பெரிதும் எதிபார்த்து காத்திருக்கும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வென்றிடாத இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 03, 2025 • 11:52 AM

அதன்படி ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.  இதில் இரு அணிகளும் கடந்த 18 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடிய நிலையிலும் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் வேளையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகிவுள்ளது. ஆர்சிபி அணியின் அதிரடி தொடக்க வீரர் பில் சால்ட் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் அவர் நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமிலும் பங்கேற்கவில்லை என்று கூறுப்படுகிறது. 

இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படியில் பில் சால்ட் தனது குழந்தைப் பிறப்பின் காரணமாக நாடு திரும்ப உள்ளதாகவும், இதனால் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஒருவேளை பில் சால்ட் விலகும் பட்சத்தில் அது ஆர்சிபி அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

 

ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் பில் சால்ட் இதுவரை விளையாடிய 12 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்களுடன் 387 ரன்களைச் சேர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்திருந்தார். இதுபோன்ற சூழ்நிலையில் பில் சால்ட் போட்டியில் விளையாடாமல் போனால் அது அந்த அணிக்கு பெரிதளவில் பாதிக்கும் என்பதால் இதனை ஆர்சிபி அணி எவ்வாறு சமாளிக்கும் என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. 

Also Read: LIVE Cricket Score

ஒருவேளை பில் சால்ட் இப்போட்டியில் இருந்து விலகும் பட்சத்தில் அவரது இடத்தில் மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நியூசிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்டர் டிம் செஃபெர்ட் லெவனில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்னதாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜேக்கப் பெத்தலிற்கு பதிலாக டிம் செஃபெர்ட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement