Advertisement

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பியூஷ் சாவ்லா!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா இன்று அறிவித்துள்ளார்.

Advertisement
அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பியூஷ் சாவ்லா!
அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பியூஷ் சாவ்லா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 06, 2025 • 03:30 PM

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 06, 2025 • 03:30 PM

மேலும் இந்திய அணிக்காக கடந்த 2006ஆம் ஆண்டு அறிமுகமான பியூஷ் சாவ்லா இதுநாள் வரை 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரை 192 போட்டிகளில் விளையாடியுள்ள சாவ்லா 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

அதேசமயம் இவர் இந்திய அணிக்காக கடந்த 2012ஆம் ஆண்டு கடைசியாக விளையாடிய நிலையில், இளம் வீரர்களின் வருகையால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பின் அவரால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. இருப்பினும் ஐபிஎல் தொடரை பொறுத்தமட்டில் காடந்த சீசன் வரை தொடர்ந்து விளையாடிய அவர் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையிலும் முதல் 5 இடங்களுக்குள் உள்ளார்.

இத்தகைய சூழலில் அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் தனது பதிவில், தான் விளையாடிய அனைத்து ஐபிஎல் உரிமையாளர் அணிகளுக்கும் (பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்), பயிற்சியாளர்கள், குடும்பத்தினர், குறிப்பாக மறைந்த தந்தை, பிசிசிஐ மற்றும் யுபிசிஏ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Piyush Chawla (@piyushchawla_official_)

Also Read: LIVE Cricket Score

பியூஷ் சாவ்லா கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தனது கடைசி போட்டியை விளையாடி இருந்தார். அதில் இமாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் உத்திர பிரதேச அணிக்காக விளையாடிய பியூஷ் சாவ்லா 12 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement