
இந்தியா - இலங்கை அணிகள் விளையாடிய கடைசி டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த மைதானம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதால் இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றார் போல, சூரியகுமார் யாதவ் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு வான வேடிக்கை காட்டினார்.
சூரியகுமார்-க்கு முன்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 35 ரன்கள் அடித்து நல்ல டெம்போ செட் செய்தார். கடைசியில் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 21 ரன்களை வெறும் 9 பந்துகளில் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 228/5 ரன்கள் அடித்திருந்தது.
ராஜ்கோட் மைதானத்தில் 229 ரன்கள் இலக்கு என்பது சைஸ் செய்யக்கூடியது தான். ஆகையால் நம்பிக்கையுடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இலங்கை பேட்ஸ்மென்கள் குஷால் மெண்டிஸ் 23 ரன்கள், தனஞ்செய டி சில்வா 22 ரன்கள் மற்றும் கேப்டன் சனக்கா 23 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.