
கிரிக்கெட் ரசிகர்களால் ரன் மிஷின், கிங் கோலி என்று அழைக்கப்படும் விராட், கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசவில்லை. விராட் கோலிக்கு பின்னாள் இருந்த ஜோ ரூட் எல்லாம் தற்போது அவரை முந்துகிறார். இதனால் சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி வீரர் என்ற பெருமையை விராட் கோலி இழந்தார்.
தற்போது கேப்டன் பதவியும் விராட் கோலியை விட்டு சென்றது. ஆர்சிபி அணிக்காகவும் விராட் கோலி இம்முறை பெரிதாக ரன் அடிக்கவில்லை. சொல்லப் போனால் முதல் முறையாக 3 முறை கோல்டன் டக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அப்போது தான் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்காத விராட் கோலி, மாலத்தீவில் தனது விடுமுறையை கழித்தார்.
தற்போது மிகவும் கடினமான இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி, அந்த நாட்டுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். இது நிச்சயம் விராட் கோலிக்கு கடும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். முதல் இன்னிங்சில் விராட் கோலி பொறுமையாக விளையாடி 69 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.