
இங்கிலாந்தில் ஒரு நாள் கோப்பை என்ற பெயரில் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் இந்த வருடம் நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக்காக இந்திய வீரர் பிரித்வி ஷா அறிமுகம் ஆனார். ஆனால் அவரால் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.
அவர் விளையாடிய 4 போட்டிகளில் 429 ரன்கள் குவித்தார். அதில் சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் 153 பந்துகளில் 244 ரன்கள் அடித்ததும் அடங்கும். அதன்பின் முழங்காலில் எற்பட்ட காயம் காரணமாக அந்த சீசனிலிருந்து விலகினார்.
இந்நிலையில் காயம் சரியான பின்பு மீண்டும் 2024 ஆம் ஆண்டு கவுண்டி சீசனில் நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக்காக பிரித்வி ஷா விளையாடுவார் என்று அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. கவுண்டி சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் கோப்பை இரண்டு தொடர்களிலும் பிரித்வி ஷா விளையாடுவார் என்று உறுதி செய்துள்ளது.