
இந்திய அணிக்காக 18 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானவர் பிரித்வி ஷா. அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். இதனால் பிரித்வி ஷாவை சச்சின், சேவாக் மற்றும் லாரா உள்ளிட்டோரை சேர்த்து வைத்த செய்த கலவை என்று ரவி சாஸ்திரியும் சேர்ந்து புகழ்ந்து பாராட்டினார்.
இதனால் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, அதன்பின் வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேபோல் 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே மொத்தமாக இந்திய அணிக்காக பிரித்வி ஷா களமிறங்கியுள்ளார்.
இவருக்கு கால்களை நகர்த்தால் விளையாடுவதால், ஃபுட் வொர்க் பிரச்சனையோடு சேர்த்து, ஷார்ட் பால்களை சந்திப்பதிலும் பிரச்சனை உள்ளது. குறிப்பாக 140 கி.மீ. வேகத்திற்கு மேல் வீசப்படும் ஷார்ட் பால்களை பிரித்வி ஷாவால் எதுவுமே செய்ய முடிந்ததில்லை. இதன் காரணமாக பிரித்வி ஷாவால் ஐபிஎல் தொடரில் கூட சரியாக விளையாட முடியவில்லை.