
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் யசிர் கான் 12 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் முகமது ரிஸ்வான் - உஸ்மான் கான் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்பின் உஸ்மான் கானும் 21 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ரிஸ்வானுடன் இணைந்த ஜான்சன் சார்லஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவனெ உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 69 ரன்கள் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜான்சன் சார்லஸும் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார்.