Advertisement

அணியின் வெற்றிக்கு உதவ விரும்பினேன் - ரவி பிஷ்னோய்!

ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உதவினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 26, 2021 • 12:09 PM
Punjab Kings' Bishnoi Reveals Plans After Thrilling Win Over SRH
Punjab Kings' Bishnoi Reveals Plans After Thrilling Win Over SRH (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. 

இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் எளிய இலக்கைத் துரத்திய ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 120 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 

Trending


இதனால் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்தது. இப்போட்டியில் பஞ்சாப் அணியின் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். 

போட்டி முடிந்து பேசிய ரவி பிஷ்னோய்,  “ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் என்னால் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. ஆனால் ஹைதராபாத்துடன் நான் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவ விரும்பினேன்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் நாங்கள் குறைந்த இலக்கையே நிர்ணயித்திருந்ததால், நான் எனது ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதுபோலவே பந்துவீசியதால் என்னால் விக்கெட்டுகளையும் எடுக்க முடிந்தது” என்று தெரிவித்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement