
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11இல் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதில், அஸ்வின் இடம் பெறாதது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இது குறித்து அஸ்வின் கூட கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்தில் தற்போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடந்து வரும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயான் முதல் இன்னிங்ஸ்லும் 4 விக்கெட்டுகள், 2ஆவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுக்ள் கைப்பற்றினார். இதை பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் ஏன் அஸ்வினை அணியில் சேர்க்காமல் விட்டார்கள் என்று விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து பேசிய அஸ்வின், “நான் அதிகம் யோசிப்பேன் என்று என்னை பல பேர் குறிவைத்து செயல்படுகிறார்கள். ஒரு வீரர் தொடர்ந்து 15, 20 போட்டிகளில் விளையாடப் போகிறார் என்று தெரிந்தால் அவர் அதிகம் யோசிக்க மாட்டார் ஆனால் உங்களுக்கு கிடைக்கப் போவது ஒன்று இரண்டு ஆட்டம் தான் என்பது தெரிந்தால், நீங்கள் அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அதிகம் யோசிக்க தொடங்கி விடுவீர்கள்.