
Quality Bowling From KKR Not Bad Batting Cost RCB The Game: Virat Kohli (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 138 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 39 ரன்களை குவித்தார். அதன்பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி மூலம் பெங்களூர் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.