Advertisement

இந்திய அணியின் அடுத்த தரமான தமிழக வீரராக சாய் சுதர்ஷன் இருப்பார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்திய அணியின் டாப் 4இல் இடது கை வீரர்களுக்கு பஞ்சம் இருப்பதால் சாய் சுதர்ஷனுக்கு விளையாடும் 11 பேர் அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 12, 2023 • 21:53 PM
இந்திய அணியின் அடுத்த தரமான தமிழக வீரராக சாய் சுதர்ஷன் இருப்பார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் அடுத்த தரமான தமிழக வீரராக சாய் சுதர்ஷன் இருப்பார் - ரவிச்சந்திரன் அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் டிஎன்பிஎல் தொடரில் நன்றாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தேர்வான அவர், கடந்த் ஐபிஎல் சீசன் இறுதி போட்டியில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார். அதன்பின் இலங்கையில் நடைபெற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கான 2023 ஆசிய கோப்பையில் இந்தியா ஏ அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்று பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்தார்.

Trending


அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளூர் தொடர்களிலும் அசத்திய அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தின் கவுண்டி தொடரிலும் சர்ரே அணிக்காக நன்றாக விளையாடினார். இப்படி கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அசத்தியதால் தங்களது கதவை தட்டிய அவரை இந்திய தேர்வுக் குழுவினர் முதல் முறையாக தேர்ந்தெடுத்துள்ளனர். இருப்பினும் நிறைய போட்டி மிகுந்த இந்திய அணியில் அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தாம் மற்றும் தினேஷ் கார்த்திக் வரிசையில் இந்தியாவுக்காக அசத்தப்போகும் அடுத்த தரமான தமிழக வீரராக சாய் சுதர்சன் இருப்பார் என்று அஸ்வின் பாராட்டியுள்ளார். மேலும் டாப் 4இல் இடது கை வீரர்களுக்கு பஞ்சம் இருப்பதால் அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அஸ்வின், “மாநில அணியில் விளையாடிய நீங்கள் தேசிய அணியில் சிறப்பாக செயல்படுவதற்கு ஒரு படி மேலே சென்று அசத்த வேண்டும். அந்த திறமை அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். சர்வதேச அரங்கில் வெவ்வேறு பந்து வீச்சுக்கு எதிராக வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாடுவதால் அதை செய்வது எளிதானதல்ல. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்காக விளையாடும் 11 பேர் அணியில் இடம் பெறக்கூடிய வீரராக சாய் சுதர்சன் இருப்பார்.

தற்போது தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியில் இருக்கும் அவர் ருதுராஜூடன் சேர்ந்து துவக்க வீரராக களமிறங்குவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை ரஜத் படிதார் துவக்க வீரராக விளையாடினாலும் சாய் சுதர்சன் 3வது இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் டாப் 4 இடங்களில் இந்தியா ஒரு இடது கை பேட்ஸ்மேனை தேடிக் கொண்டிருக்கிறது என்பதை மறக்காதீர்கள். எனவே சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடிய திறமையைக் கொண்டுள்ள அவரால் கிடைக்கும் வாய்ப்பில் வெற்றிக்கு போராட முடியும்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement