
இந்திய அணியில் தற்போது வாய்ப்பு பெற்று விளையாடுவோம் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கு முன்பாகவே இந்திய அணிக்கு தேர்வானவர் மத்திய பிரதேஷ் அணிக்காக விளையாடி வரும் ரஜத் பட்டிதார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் தன்னுடைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். இளம் வீரர் ஒருவர் காயமடையவே பெங்களூரு அணியில் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்படி உள்ளே வந்த இவர் அந்த வருட ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் இரண்டு முறை அரை சதத்தை கடந்தவர் என்கின்ற அரிய சாதனையை படைத்தார். 16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் இதை செய்தது கிடையாது. அங்கிருந்து பிசிசிஐ தேர்வு குழுவுக்கு இவர் மேல் பார்வை விழுந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இவர் காலில் காயமடைந்தார். இதனால் இவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட காரணத்தினால் இந்த முறை ஐபிஎல் தொடரையும் தவறவிட்டார்.
காயத்தில் இருந்து திரும்ப வந்து மத்திய பிரதேஷ் அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்தியத் தேர்வுக்குழு எந்த தாமதத்தையும் ஏற்படுத்தாமல், உடனடியாக இவரை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்திருக்கிறது.