Advertisement

ரஞ்சி கோப்பை 2024: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; வலிமையான நிலையில் தமிழ்நாடு!

பஞ்சாப் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தமிழ்நாடு அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 16, 2024 • 20:51 PM
ரஞ்சி கோப்பை 2024: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; வலிமையான நிலையில் தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2024: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; வலிமையான நிலையில் தமிழ்நாடு! (Image Source: Google)
Advertisement

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற எலைட் குரூப் சி பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேலம் கிரிக்கெட் மைத்தானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சுரேஷ் லோகேஷ்வர் - நாராயண் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 10 ரன்கள் மட்டும் எடுத்திருந்த லோகேஷ்வர் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பாலும் 20 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நாராயண் ஜெகதீசன் 22 ரன்களிலும், முகமது அலி 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending


இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - விஜய் சங்கர் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் இருக்கும் பாபா இந்திரஜித் 122 ரன்களையும், விஜய் சங்கர் 85 ரன்களையும் சேர்த்து களத்தில் உள்ளனர். பஞ்சாப் அணி தரப்பில் சுக்விந்தர் சிங் 2 விக்கெட்டுகளையும், சித்தார்த் கௌல், அபிஷேக் சர்மா தால் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement