
Ranji Trophy Final: MP Stand Strong With First-Innings Lead Against Mumbai At Stumps On Day 4 (Image Source: Google)
ரஞ்சிக் கோப்பை தொடரின் நடப்பானடு சீசனுக்கான இறுதிப் போட்டியில் மும்பை - மத்தியப் பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதிலும் சர்பராஸ் கானின் சதம் மற்றும் ஜெய்ஸ்வாலின் அரைசதத்தின் உதவியுடன் 374 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மத்தியப் பிரதேச ஓப்பனர்கள் யஷ் துபே மற்றும் ஹிமான்சு மந்திரி ஆகியோர் மும்பை பவுலர்களுக்கு கடும் சவால் அளித்தனர். ஹிமான்சு 31 ரன்களில் ஆட்டமிழக்க, யஷ் துபே சதம் விளாசி அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய சுபம் ஷர்மா மற்றும் ரஜத் படிதார் ஆகிய இருவரும் மும்பை பவுலர்களை கடுமையாக சோதித்தனர்.