ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக உள்ள போதும், பந்துவீச்சு தான் கவலையளித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அனுபவம் குறைந்த இளம் வீரர்களை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.
இந்நிலையில் உலகக்கோப்பையை எதிர்கொள்ள ரவிசாஸ்திரி முக்கிய யோசனை கூறியுள்ளார். அதில், “பும்ரா இல்லாதது துரதிஷ்டவசமானது தான். அதிகப்படியான போட்டிகளில் விளையாடியதால் காயம் ஏற்பட்டுவிட்டது. இதில் இனி கவலைக்கொண்டு எந்தவித பயனும் இல்லை. எனவே இதனை மற்றொருவருக்கான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு நகர வேண்டும்.