
கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டாக இருந்தாலும், எதிரெதிர் அணி வீரர்கள் மோதிக்கொள்வது வழக்கம். சில வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது அவர்களது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர உதவும். அப்படியான வீரர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதினால் மோதல் கடுமையாக இருக்கும்.
இதற்கு மிகச்சிறந்த உதாராணம் கம்பீர் - கோலி. இருவருமே சண்டையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பவர்கள். இருவரும் எதிரெதிர் அணிகளில் ஆடினால் ஆடுகளம் ரணகளமாகத்தான் இருக்கும். 2013 ஐபிஎல்லில் கேகேஆர் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது கம்பீரும் கோலியும் களத்தில் கடுமையாக மோதிக்கொண்டனர்.
அதன்பின்னர் இருவரும் களத்தில் சந்தித்துக்கொள்ளும்போது சுமூகமாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் இருவருக்கும் இடையே பனிப்போர் இருந்துவந்தது. இருவருமே ஆக்ரோஷமானவர்கள் என்பதால் இவர்கள் இருவரும் மோதும் போட்டிகளில் விக்கெட் மற்றும் வெற்றியை ஆவேசமாக கொண்டாடக்கூடியவர்கள். அதுவே சில சமயங்களில் மோதலுக்கு வழிவகுத்துவிடும்.