
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இறுதியாக அணியை அறிவிக்கும் நாளாக, செப்டம்பர் 28ஆம் தேதி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் அனுபவ சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறுவாரா? என்பது பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட உலகக்கோப்பை இந்திய அணியில் இரண்டு இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் வலதுகை சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் கூட கிடையாது. எனவே உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
கொடுக்கப்பட்ட வாய்ப்பில் ரவிச்சந்திரன் அஸ்வினும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இத்தொடரில் அசத்துவதால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆலோசகர் பதவி கிடைக்குமே தவிர 15 பேர் உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார்.