Advertisement

இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!

இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 09, 2023 • 22:54 PM
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

இருப்பினும் பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து இன்னும் குணமடையாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வரும் நிலையில் மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் இல்லாததும் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. ஆனால் எது எப்படியிருந்தாலும் இந்த உலகக் கோப்பை தொடங்க இன்னும் 60 நாட்கள் கூட இல்லாத காரணத்தால் நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கோப்பையை வெல்லப் போகும் அணிகள் பற்றிய கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Trending


குறிப்பாக லீக் சுற்றில் அசத்தி உலகக் கோப்பையை தொடுவதற்கான வாய்ப்பு கொடுக்கும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறப் போகும் டாப் 4 அணிகள் யார் என்ற கணிப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. அதில் எடுத்த எடுப்பிலேயே வெளிநாட்டில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் புலியாக கருதப்படும் இந்தியா முதல் அணியாக இருக்கும் என்று கிளன் மெக்ராத், இயன் மோர்கன் போன்ற வெளிநாட்டவர்கள் கணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் வரும் ஐசிசி தொடர் தொடங்கும் போது இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “உலகில் இருக்கும் அனைவரும் இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று தொடர்ந்து சொல்லி வருவதை நான் அறிவேன். சொல்லப்போனால் ஒவ்வொரு ஐசிசி தொடருக்கு முன்பாகவும் அவர்கள் இந்த யுத்தியை கடைப்பிடித்து வருகிறார்கள். அதாவது கண்டிப்பாக கோப்பையை வெல்வார்கள் என்று ஆரம்பத்திலேயே சொல்லி தங்கள் மீதான அழுத்தத்தை குறைத்து இந்தியா மீது அதிகப்படியான அழுத்தத்தை போடும் யுத்தியை வெளிநாட்டவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஆனால் ஆஸ்திரேலியா மிகவும் சக்தி மிகுந்த அணியாகும். மேலும் பார்படாஸில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் நாம் தோல்வியை சந்தித்த போது விமர்சிக்காமல் ஆதரவு கொடுத்து அழுத்தமற்ற இந்திய அணியை உலக கோப்பைக்கு அனுப்ப வேண்டும் என்று நான் சொன்னேன். அதை சில ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் சிலர் எப்படியும் இந்தியா கோப்பையை வெல்லப் போவதில்லை என்பதால் மொத்த பழியையும் ரசிகர்கள் மீது போடலாம் என்பதற்காக அப்படி பேசுகிறார் என்று என்னையே விமர்சித்தனர்.

அப்படி ரசிகர்கள் விமர்சிப்பதை நாம் எப்போதும் மாற்ற முடியாது. அவர்களுடைய ஆதங்கத்தை நான் புரிந்து கொள்கிறேன். சொல்லப்போனால் அவர்கள் தான் அணியின் முக்கிய பங்குதாரர்கள். அவர்களால் போட்டியின் மொத்த எண்ண அலைகளையும் மாற்ற முடியும். குறிப்பாக அவர்கள் விமான நிலையம் முதல் மைதானம் வரை தொடர்ந்து கூச்சலிட்டு ஆதரவு கொடுப்பார்கள்”

மேலும் 1975, 1979 கோப்பைகளை வென்ற போது வெஸ்ட் இண்டீஸ் பவரான அணியாக இருந்தது. அதை தொடர்ந்து 1983இல் கோப்பையை வென்ற முதல் இந்தியா வலுவான அணியாக மாறியது. அதே போல 1987 சாம்பியன் பட்டம் வென்றது முதல் தற்போது வரை ஆஸ்திரேலியா உலகின் வலுவான அணியாக திகழ்கிறது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement