Advertisement

சச்சினின் சாதனையை நெருங்கிய அஸ்வின்; பாராட்டும் கிரிக்கெட் உலகம்!

 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆட்டநாயகம் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்ற 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan December 25, 2022 • 19:02 PM
Ravichandran Ashwin was named the Man of the Match!
Ravichandran Ashwin was named the Man of the Match! (Image Source: Google)
Advertisement

வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 22ஆம் தேதியன்று மிர்பூரில் தொடங்கிய 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 227 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். 

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 94/4 என தடுமாறினாலும் ரிஷப் பந்த் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். அதனால் 314 ரன்கள் குவித்த இந்தியாவை ஆல் அவுட்டாக்கிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் மற்றும் டைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் மீண்டும் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் 231 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Trending


இறுதியில் 145 என்ற சுலபமான இலக்கை சேசிங் செய்த இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 2, கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 45/4 என தடுமாறிய இந்தியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற 4வது நாளில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட ரிஷப் பண்ட் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போதாகுறைக்கு மறுபுறம் போராடிய அக்சர் படேல் 34 ரன்களுக்கு அவுட்டானதால் 74/7 என தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 8வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 42 ரன்களும் எடுத்து காப்பாற்றினர்.

அதனால் 145/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்யாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா 2 – 0 என்ற கணக்கில் வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் வைட் வாஷ் செய்து இத்தொடரின் கோப்பை வென்றது. அத்துடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்ட இந்தியாவின் வெற்றிக்கு பேட்டிங்கில் மொத்தமாக 58 ரன்களும் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளும் எடுத்து ஆல் ரவுண்டராக செயல்பட்ட தமிழக வீரர் அஷ்வின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே 9 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ள அஸ்வின் இப்போட்டியில் வென்ற ஆட்டநாயகன் விருதையும் சேர்த்து 9 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். மொத்தம் 18 விருதுகளை பெற்றுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விருதுகளை வென்ற 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். 

இதில் மற்றொரு பாராட்ட வேண்டிய அம்சம் என்னவெனில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் 200 போட்டிகளில் தான் 19 விருதுகளை வென்றுள்ளார். ஆனால் அஸ்வின் வெறும் 88 போட்டிகளில் 18 விருதுகளை வென்றுள்ளார். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்தியாவின் மிகச்சிறந்த மேட்ச் வின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் செயல்பட்டு வருவது பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement