ஐபிஎல் 2021: துபாய் வந்தடைந்த ‘மிஸ்டர் 360’!
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கலந்துகொள்வதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இன்று துபாய் வந்தடைந்தார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![RCB's AB De Villiers Lands In Dubai Ahead Of IPL 2021 RCB's AB De Villiers Lands In Dubai Ahead Of IPL 2021](https://img.cricketnmore.com/uploads/2021/09/rcbs-ab-de-villiers-lands-in-dubai-ahead-of-ipl-2021-(1)-lg.jpg)
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்தமாத இறுதியில் துபாய் சென்றடைந்தது.
Trending
இந்நிலையில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் இன்று துபாய் சென்றடைந்தார். தற்போது துபாயிலுள்ள டி வில்லியர்ஸ் 6 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு, சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடிய டி வில்லியர்ஸ், 207 ரன்களை குவித்துள்ளார். முன்னதாக துபாய் சென்ற ஆர்சிபி அணியின் தனிமைப்படுத்துதலை முடித்து பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now