
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் போது இந்திய அணி வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன்படி ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டி20 போட்டிகளுக்கு மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தயாராக வேண்டும் என்று முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மார்ச் முதல் மே வரை நடைபெறும், ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களை சிகப்பு பந்து பயிற்சிகளில் ஈடுபட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனெனில் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதனால் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சிகளில் இடபட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புவதாக கூறப்படுகிறது.