
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது தென் ஆப்பிரிக்காவில் வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றி இந்திய மகளிர் அணி - வங்கதேச மகளிர் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைக் குவித்தது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யஸ்திகா பாண்டியா, ஷஃபாலி வர்மா, ஹர்லின் டியோல், ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளமவென உயர்த்தினர். இதில் ரோட்ரிக்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, மறுமுனையிலிருந்த ரிச்சா கோஷ் அரைசதம் கடந்தார்.