
இந்திய மாநிலங்களில் கிரிக்கெட்டில் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய மாநிலம் அசாம். அப்படியான ஒரு சிறிய கிரிக்கெட் மாநிலத்திலிருந்து வந்திருக்கக்கூடிய இளம் வீரர்தான் ரியான் பராக். தற்போது 21 வயதையே எட்டியிருக்கும் ரியான் பராக் இதுவரை 5 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ளார்.
தற்போது 21 வயதான இவர் 2019 ஆம் ஆண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பதினாறாவது வயதில் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதற்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உச்சபட்சமாக சென்று 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 3.80 கோடி கொடுத்து மீண்டும் வாங்கிக் கொண்டது. அந்த அளவிற்கு இவர் மீது அந்த அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்திருக்கிறது.
ஆனால் ஐந்து வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான இவருடைய செயல்பாடுகளை எடுத்துக் கொண்டால் பெரிய அளவில் கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை வாங்கிக் கொண்டது மட்டும் அல்லாமல் விளையாடவும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கும்.