Advertisement
Advertisement
Advertisement

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.

Advertisement
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 19, 2024 • 08:20 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

Bharathi Kannan
By Bharathi Kannan
October 19, 2024 • 08:20 PM

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே, டிம் சௌதீ ஆகியோரது அரைசதத்தின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களையும், டெவான் கான்வே 91 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Trending

அதன்பின் 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொட்ங்கிய இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ரிஷப் பந்த் 99 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்திருந்தனர்.

இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை நியூசிலாந்து அணி 107 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் 99 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த ரிஷப் பந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையையும் முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 2500 ரன்களைக் கடந்த வீரர் எனும் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 69 இன்னிங்ஸ்களில் 2500 ரன்களைக் கடந்திருந்த நிலையில், அதனை தற்போது ரிஷப் பந்த் 62 இன்னிங்ஸ்களிலேயே இந்த மைல்கல்லை எட்டி முறியடித்துள்ளார். மேற்கொண்டு இந்த பட்டிலில் இந்திய அணியின் முன்னால் விக்கெட் கீப்பர் பெட்டரான ஃபரூக் எஞ்சினியர் 82 இன்னிங்ஸ்களில் 2500 ரன்களைக் கடந்து மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement