
Rishabh Pant Reords: ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்பின் கேட்சை பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 150 கேட்சுகளை பூர்த்தி செய்துள்ளார்.
ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், டங்க் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 62 ரன்களிலும், ஒல்லி போப்106 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, ஹாரி புரூக் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். இந்நிலையில் இப்போட்டியின் ரிஷப் பந்த் இங்கிலாந்து வீரர் ஒல்லி போப்பின் கேட்சை பிடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 150ஆவது கேட்ச்சைப் பிடித்து அசத்தி இருந்தார்.