
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயன ஐந்தாவது டெச்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிரது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களையும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். தொடர்ந்து இப்போட்டியில் அவர் அபாரமாக விளையாடியதுடன் 29 பந்துகளில் அரைசதம் கடந்தும் அசத்தினார். இதில் 33 பந்துகளில் 184.85 ஸ்டிரைக் ரேட்டில் 61 ரன்கள் எடுத்த பந்த், அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசி இருந்தார். இதன்மூலம் அவர் தற்போது சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு