Advertisement
Advertisement
Advertisement

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்; மருத்துவமனையில் அனுமதி!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Rishabh Pant Injured As Car Hits Divider
Rishabh Pant Injured As Car Hits Divider (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 30, 2022 • 10:11 AM

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி விக்கெட் கீப்பர் வீரராக வலம் வருபவர் ரிஷப் பந்த். இவர் நேற்று ரூர்க்கியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து டெல்லிக்கு பிஎம்டபிள்யூ காரில் சென்றுள்ளார். அப்போது, உத்தரகாண்ட் மாநிலம் ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அவரது கார் டிவைடரில் மோதியதில் தீப்பிடித்ததுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 30, 2022 • 10:11 AM

அதான்பிறகு பந்த் காரின் கண்ணாடியை உடைத்து வெளியேறியதாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவலின்படி, ரிஷப் முதலில் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பந்தின் நெற்றி மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு தேஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். 

Trending

தற்போது ரிஷப் பந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் மேக்ஸ் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சக்ஷாம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுஷில் நகர் தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கப்பட்டார். பிசிசிஐ செய்திக்குறிப்பில் பந்த் காயமடைந்தாரா, ஓய்வெடுத்தாரா அல்லது கைவிடப்பட்டாரா என்பதை குறிப்பிடவில்லை. 

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்ததால், அவர் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement