Advertisement
Advertisement
Advertisement

எப்போது வேண்டுமானாலும் வெற்றியை மாற்றக்கூடிய ரிஷப் பந்த் ஒரு கேம் சேஞ்சர் - சுனில் கவாஸ்கர்!

இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan December 13, 2023 • 23:36 PM
எப்போது வேண்டுமானாலும்  வெற்றியை மாற்றக்கூடிய ரிஷப் பந்த் ஒரு கேம் சேஞ்சர் -  சுனில் கவாஸ்கர்!
எப்போது வேண்டுமானாலும் வெற்றியை மாற்றக்கூடிய ரிஷப் பந்த் ஒரு கேம் சேஞ்சர் - சுனில் கவாஸ்கர்! (Image Source: Google)
Advertisement

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை தொடங்கியுள்ளது. இதில் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இருப்பினும் தற்போதைய நிலைமையில் டி20 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது.

ஏனெனில் இஷான் கிசான் டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வரும் நிலையில் ஜித்தேஷ் சர்மா இதுவரை பெரிய அளவில் அசத்தவில்லை. மறுபுறம் கார் விபத்தில் காயத்தை சந்தித்த ரிஷப் பந்த் இன்னும் முழுமையாக குணமடையாமல் இருப்பதால் விக்கெட் கீப்பராக விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போது நன்றாக குணமடைந்து வரும் அவர் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது

Trending


குறிப்பாக விக்கெட் கீப்பராக விளையாடுவது மிகவும் கடினம் என்பதால் இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி பேட்ஸ்மேனாக மட்டும் அவர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். 

அதில் மேற்கொண்டு காயங்கள் இல்லாமல் விளையாடும் பட்சத்தில் தாம் தேர்வுக் குழுவில் இருந்தால் அதற்கடுத்த ஒரு மாதத்தில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த்தை தேர்வு செய்வேன் என்றும் கவாஸ்கர் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ஏனெனில் ரிஷப் பந்த் எந்த நேரத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றியை மாற்றக்கூடிய கேம் சேஞ்சர் என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கண்டிப்பாக மீண்டும் அவர் அணிக்குள் வரலாம். வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரரான அவர் ஐபிஎல் தொடரில் தம்முடைய ஃபிட்னஸ் அளவை காட்டுவார். எனவே ஐபிஎல் தொடரில் காயங்கள் எதுவும் சந்திக்காமல் முழுமையாக விளையாடும் பட்சத்தில் கண்டிப்பாக அவர் இந்திய அணிக்குள் வருவதற்கான தகுதியை கொண்டுள்ளார். 

ஐபிஎல் தொடரில் ரன்கள் அடிக்கிறார் அல்லது இல்லை என்பதை தாண்டி கேம் சேஞ்சரான அவர் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே நான் தேர்வுக் குழுவில் இருந்தால் இந்திய அணிக்காக விளையாடப் போகும் முதற்கட்ட வீரர்களில் அவரும் ஒருவராக இருப்பார்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement